மாயமான காசிமேடு மீனவர்கள் 5 பேர் ஆந்திராவில் மீட்பு: அழைத்துவர விரைந்தது போலீஸ்

By செய்திப்பிரிவு

கடலில் மீன் பிடிக்கச் சென்று மாயமான காசிமேடு மீனவர்கள் 5 பேரும் ஆந்திர மாநிலம் மசூலிப் பட்டினத்தில் இருப்பதை அறிந்து போலீஸார் அவர்களை மீட்டுவர சென்றுள்ளனர்.

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்தவர்கள் கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ். மீனவர்களான இவர்கள் கடந்த 22-ம் தேதி பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். பிற்பகல் 2 மணிக்கு சென்ற இவர்கள் அன்று இரவு 12 மணிக்குள் கரைக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், மறுநாள் மாலை வரை அவர்கள் திரும்பவில்லை. இதுகுறித்து அவர்கள் குடும் பத்தினர் புகார் அளித்தும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப் படாததால் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கடலோர காவல் படையினர் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாயமான ஐந்து மீனவர்களும் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருப்பதாக காசிமேடு போலீஸாருக்கு நேற்று பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை மீட்க போலீஸார் விரைந்துள்ளனர். அவர்கள் ஐந்து பேரும் வழி மாறி ஆந்திர கடல் பகுதியில் தத்தளித்தபோது, ஆந்திர மீனவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த் ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்