மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை: மத்திய அரசு மீது ஜி.கே.வாசன் புகார்

By செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டினார்.

கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவுக்காக நேற்று ராமநாதபுரம் வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் தொடர்கிறது. எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்று இலங்கை அமைச்சரின் அச்சுறுத்தல் பேச்சு கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் பிரச்சினை யில் மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை கடற்படையினர் சேதப்படுத்திய தமிழக படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீஸார், வனத் துறையினர் ஆகியோர் மீது நியாயமான விசாரணை நடத்த ஆந்திர அரசு தவறிவிட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். விலைவாசி உயர்வை தடுக்க கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்.

தமாகா யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை மக்கள் மன்றத்தில் பேசி அவர்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்