கடந்த மே 15-ம் தேதி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை அதிபர் சிறிசேனா விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 இலங்கை மீனவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 16 இலங்கை மீனவர்களும் திரிகோணமலை, சிலாபம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சனிக்கிழமை காலை இந்திய- இலங்கை சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் 16 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
22 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
42 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago