முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு தமிழகத்தில் அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுகவின் 22-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாய கத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற வைகோ, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தொண் டர்கள், நிர்வாகிகளுக்கு இனிப்பு களை வழங்கினார். அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 21 ஆண்டுகளாக தமிழ கத்தின் முக்கியப் பிரச்சினைகளுக் காக மதிமுக உறுதியுடன் குரல் கொடுத்து வந்திருக்கிறது. ஊழல், மதுவுக்கு எதிராக மக்கள் இயக் கத்தை தொடர்ந்து நடத்தி வரு கிறோம். மதுவுக்கு எதிராக மதிமுக நடத்திய போராட்டத்துக்கு பெண்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான பிறகு தமிழகத்தில் அரசு நிர்வாகம் முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. நெருக்கடி, மன அழுத்தத்தால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது கவலை அளிக்கிறது.
தமிழகத்தின் வாழ் வாதாரப் பிரச்சினைகளில், நியாயமானவற்றைகூட மத்திய பாஜக அரசு புறக்கணிக்கிறது. இதை எதிர்த்து மதிமுக தொடர்ந்து போராடும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
38 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago