கோடை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06034) சென்னையில் இருந்து இன்று (20-ம் தேதி) மற்றும் 27-ம் தேதிகளில் பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.
திருநெல்வேலி சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06035) திருநெல்வேலியில் இருந்து நாளை (21-ம் தேதி) மற்றும் 28-ம் தேதிகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு சென்னை வந்துசேரும்.
சென்னை எழும்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06036) சென்னையில் இருந்து நாளை (21-ம் தேதி) இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி போய்ச் சேரும்.
திருநெல்வேலி சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்: 06037) திருநெல்வேலியில் இருந்து 22-ம் தேதி இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு வந்துசேரும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரயில் (எண்: 00608) நாகர்கோவிலில் இருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை வந்துசேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
9 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
40 mins ago
கருத்துப் பேழை
33 mins ago
கருத்துப் பேழை
41 mins ago
சினிமா
3 hours ago
கல்வி
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
5 hours ago