பிரதமர் மோடியின் வாழ்த்துகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக 23.5.2015 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அலுவலக டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியினைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் விபரம்வருமாறு:

"தமிழக முதல்வராக நான் 5-வது முறையாக பதவியேற்றதற்கு உங்கள் வாழ்த்துக்களுக்கும், நல்லாசிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், உங்களுக்கான எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு கடிதம் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. இதேபோல் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசி மூலம் வாழ்த்து கூற, நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜெயலலிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்