தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதி களில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங் களின் இனப்பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன் வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக் கப்படுகிறது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 45 நாள் மீன்பிடித் தடைக் காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. மே 29-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக் கும்.
இதனால் தமிழகம் முழு வதும் 15 ஆயிரம் விசைப் படகு கள் கடலுக்கு செல்லாமல் கடற் கரையில் ஆழம் குறைந்த பகுதிகளில் ஓய்வெடுக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய கடலோரப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீ்ன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
40 secs ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago