அத்தியாவசிய மருந்துகள் 3.8% விலை உயர்வு: டாக்டர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

மலேரியா, மூட்டுவாதம், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக்கு டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 108 அத்தியாவசிய மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை மத்திய பாஜக அரசு நீக்கியுள்ளது. மருந்துகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, மருந்து விலை கட்டுப்பாட்டுக்கான தேசிய ஆணையத்திடம் இருந்து பறித்துவிட்டது.

தற்போது 509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 3.8 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் மலேரியா, மூட்டுவாதம், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகளின் விலை உயரும்.

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை ரத்து செய்து அனைத்து மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

14 mins ago

சினிமா

43 mins ago

க்ரைம்

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

37 mins ago

தொழில்நுட்பம்

19 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்