காவிரி விவகாரம்: தமிழக, கர்நாடக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்

By பிடிஐ

நாடாளுமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக, கர்நாடக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டெல்லி ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் முடிந்தவுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அதிமுக உறுப்பினர் வேணுகோபாலை விவகாரத்தை எழுப்ப அனுமதி அளித்தார்.

அவர், காவிரியில் இரண்டு அணைகள் கட்ட கர்நாடகம் முடிவெடுத்துள்ளது, இது காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயத்தின் இறுதி முடிவுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டினார்.

உடனே கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் அவரை அதிமுக உறுப்பினர்கள் சத்தம் போட்டு அடக்க முயற்சி செய்தனர்.

மத்திய அமைச்சர் மற்றும் கர்நாடக மாநில பாஜக எம்.பி.யுமான ஆனந்த் குமார், வேணுகோபாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு அதிமுக உறுப்பினர்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

42 mins ago

க்ரைம்

49 mins ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்