அம்மா உணவகம் முறையாக செயல்படுகிறதா, தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதை மொபைல் போனில் உள்ள செயலி மூலம் பொது மக்கள் மாநகராட்சிக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
சென்னை மாநகராட்சி தற்போது மக்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் ‘க்ளீன் சென்னை ‘ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘க்ளீன் சென்னை ‘ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குப்பைத்தொட்டிகள், கழிவறைகள் போன்றவை எந்த நிலையில் உள்ளன என்பதைப் படம் பிடித்து இந்த செயலி மூலம் அனுப்பலாம். மேலும் இந்த வசதிகளின் தரத்தை ஒன்று முதல் ஐந்து வரையிலான வரிசையில் மதிப்பிடலாம்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த வசதி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். தற்போதுள்ள வசதிகளை தவிர அம்மா உணவகத்தின் செயல்பாடு, , சாலைகளின் தரம் என பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்தையும் இந்த செயலியில் மதிப்பீடு செய்ய வசதிகள் செய்யப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
9 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
58 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago