திருப்பூரில் 17-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.

மேலும், தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்