எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பி.டெக். நுழைவுத்தேர்வு 19-ம் தேதி தொடக்கம்

By செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது.

இதுதொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தலைவர் ஆர்.பி. சத்தியநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் இருந்தும் ஏறத்தாழ ஒருலட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆன்லைன் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரையும், சாதாரண முறையிலான நுழைவுத்தேர்வு (பென்சில்-பேப்பர் முறை) 26-ம் தேதியும் நடத்தப்படும்.

நுழைவுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு மே 11-ம் தேதி முதல் நடைபெறும். வகுப்புகள் ஜூலை 15-ல் தொடங்கும். எம்டெக், எம்பிஏ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே 31-ம் தேதி நடத்தப்பட உள்ளது. முதுகலை பட்டப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை இறுதியில் தொடங்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

க்ரைம்

44 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்