கத்தி, அரிவாளுடன் சாலையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

By செய்திப்பிரிவு

நுங்கம்பாக்கத்தில் கத்தி, அரிவாளுடன் கல்லூரி மாணவர்கள் சாலையில் மோதிக்கொண்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண் டிருந்தனர். சிறிது நேரத்தில் மேலும் சில மாணவர்கள் அங்கு வந்தனர். இரண்டு கோஷ்டியாக நின்ற அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். அப்போது சில மாணவர்கள் கத்தி, அரிவாளுடன் வெட்ட பாய்ந்தனர். இதை கண்ட சில மாணவர்கள், சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் சாலையின் நடுவே நடந்த இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்