திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே உள்ள அம்மையார் குப்பத் தைச் சேர்ந் தவர் நடேசன்(90).
இவர், நேற்று அதிகாலை கேபிஎன் கண்டிகை பகுதியில் வயலில் நடந்து சென்றபோது, அந்தப் பகுதியில் இருந்த- 50 அடி ஆழ பாழடைந்த தரைக் கிணற்றில் கால் தவறி விழுந்துவிட்டார்.
கிணற்றுக்குள் மண்டிக்கிடந்த முட்புதரில் சிக்கிக் கொண்டு நடேசன் அலறினார். பொதுமக்கள், கிணற்றிலிருந்து அவரை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, தகவலின்பேரில் பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி நடேசனை மீட்டனர்.
லேசான காயங்களுடன் உயிர்த் தப்பிய நடேசனுக்கு சோளிங்கர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக் கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
இந்தியா
53 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
க்ரைம்
4 hours ago