பெண் காவலரிடம் ஆபாச பேச்சு: காவல் உதவி ஆணையருக்கு எதிரான மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

பெண் காவலரிடம் ஆபாசமாக பேசிய விவகாரத்தில், உதவி ஆணையருக்கு எதிரான புகாரை பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தாம்பரத் தைச் சேர்ந்த தயாளன், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

சென்னை காவல் துறையில் உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் ஒருவர், பெண் காவலரிடம் ஆபாசமாக பேசியதாக அண்மையில் வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. பணி நேரத்தில் பெண் காவலரிடம் இதுபோன்று ஆபாசமாக பேசியது காவல் துறை நெறிமுறைகளுக்கு எதிரானது.

எனவே, அந்த காவல் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் துறை ஆணையரிடம் கடந்த 16-ம் தேதி புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்புகார் தொடர் பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண் டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், ‘புகாரில் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்கிறேன்’என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்