ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் கைது: இளம்பெண் புகார் மீது 3 ஆண்டுகளுக்கு பிறகு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர், கடந்த 2011-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற் பதற்காக தனியார் பயிற்சி மையத் தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டனர். 2010-ல் நடந்த தேர்வில் வருண் குமார் வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன்.

2011-ம் ஆண்டு மே மாதம் ஐ.பி.எஸ். அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அவரைத் திரு மணம் செய்து கொள்ள அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவரது பெற்றோ ரும் இதற்கு உடந்தையாக இருந்தனர். முடிவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண் குமார் மறுத்துவிட்டார். அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் பிரியதர் ஷினி கூறியிருந்தார்.

புகாரின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித் தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வருண் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி யது. முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிரிய தர்ஷிணி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. வருண்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த வருண் குமார் சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற் றினார். பின்னர் அருப்புக் கோட்டைக்கு மாற்றப்பட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் சில நாட்கள் அவர் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சைதாப்பேட்டை நீதிமன்றத் தில் வருண்குமார் சரண் அடைந் தார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனே வருண்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, வருண்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 secs ago

க்ரைம்

7 mins ago

சினிமா

13 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்