சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை ஆளுநர் ரோசய்யாவை வழக்கறிஞர் சங்கத்தினர் சந்தித்தனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆளுநரிடம் ஒரு மனுவை அளித்தார்.
''18 நீதிபதிகள் காலிப் பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும். தற்போது பரிந்துரைத்துள்ள 9 பேர் கொண்ட பட்டியலை நிராகரிக்க வேண்டும்.'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
18 பணியிடங்களில் மகளிருக்கு 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் சங்கம் மனு அளித்துள்ளது. கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதி தந்திருக்கிறார் என வழக்கறிஞர் சங்கத் தலைவி நளினி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
22 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
3 hours ago