கல்லூரி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் கைது

By செய்திப்பிரிவு

சம்பளம் மற்றும் பதவி உயர்வு, பணி மேம்பாடு, புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம் ஆகியவை சார்பில் 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி போராட்டத்தின் முதல் நாளான நேற்று சென்னை கல்லூரி சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி ஆசிரியர் ஆசிரியைகள் இதில் கலந்துகொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கல்லூரி இயக்குநரக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 300 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

விளையாட்டு

8 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்