சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், தமிழக அரசால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக சிறப்பாக பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் ஆகியோருக்கு 2014-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகளை வழங்கி கவுரவிக்க சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது.

இவ்விருதுகளைப் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் பிப்ரவரி 25-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். >www.environment.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந் தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் பிப்ரவரி 27-ம் தேதி மாலைக்குள் மேற்கூறிய அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 24336421 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்