தா.பாண்டியன், திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் திருச்சிக்கு வந்தார்.

காய்ச்சல், சளி காரணமாக அவதிப்பட்ட அவர், புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 3 நாட்களாக திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக திருச்சிக்கு வந்த கனிமொழி, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வந்த தமிழர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று திருமாவளவனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

22 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்