செஞ்சி அருகே உள்ள தேவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (33). இவரது மனைவி பரமேஸ்வரி (24). இவர்களுக்கு ஒன்றரை வயதில் கார்த்திகா என்ற பெண் குழந்தையும், கார்த்திக் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது பரமேஸ்வரி தனது 2 குழந்தைகளையும் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்துள்ளார். அதை அறிந்த அக்கம் பக்கத்தினர் பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளை மீட்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு வேலூர் அருகே உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கார்த்திகாவும், கார்த்திக்கும் உயிரிழந்தனர். பரமேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
7 mins ago
இந்தியா
15 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
24 mins ago
சுற்றுச்சூழல்
34 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
வணிகம்
9 hours ago