காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத் தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகளை தனியார் நிறுவனத்தினர் மேற் கொண்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக, புகைப்படம் எடுப்பதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனராம்.
இதையடுத்து, புகைப்படம் எடுக்கும் தனியார் நிறுவனத்தை யும், நகராட்சி அலுவலர்களை யும் கண்டித்து, நேற்று புகைப் படம் எடுக்க வந்த பொதுமக்கள், நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், ஒப்புகைச் சீட்டு அளிப்பதாக நகராட்சி மேலாளர் கூறியதை யடுத்து, பொதுமக்கள் மறிய லில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணை யர் சர்தாரிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக அதிகாரிகளி டம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
49 mins ago
ஜோதிடம்
53 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago