நீதிமன்றத்தால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அட்டாக்பாண்டிக்கு, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு. இவர் கடந்த 31.1.2012-ல் கொலை செய் யப்பட்டார். இக்கொலை தொடர் பாக அட்டாக்பாண்டி உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அட்டாக்பாண்டி 3-வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜ ரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, அட்டாக்பாண்டி மீது கொலை உள்பட 15 வழக்குகள் உள்ளன. அவர் தொடர்ந்து தலை மறைவாக உள்ளார். அவரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தால் அட்டாக்பாண்டி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேடப்படும் குற்றவாளியாக அறி விக்கப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தர விட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அட்டாக்பாண்டி முன்ஜாமீன் பெற தகுதியற்றவர்.
மேலும், பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் விசாரணை இன்னும் முடியவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அட்டாக்பாண்டியிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளு படி செய்ய வேண்டும் என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர் ராஜகோபால் வாதிடும்போது, பொட்டு சுரேஷ் கொலை ஒரு அரசியல் கொலை யாகும். அதற்கும் மனுதாரருக் கும் தொடர்பில்லை. இவ்வழக்கில் கைதான, நீதிமன்றத்தில் சரண டைந்த அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். போலீஸார் விசாரணையை முடித்து, நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே, இவ் வழக்கு தொடர்பாக அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடத்த வேண்டியதில்லை. அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, பொட்டு சுரேஷ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர், மனு மீது தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago