அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 4 ஆயிரத்து 640 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாக சட்டப்பேரவை யில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட் டார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அவர் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் 4,640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு தற்போது அந்த மின்சாரம் கிடைத்து வருகிறது. இதுதவிர, வல்லூர் 3-ம் அலகில் இருந்து 350 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில நாட்களிலும் 2,163 மெகாவாட் இன்னும் சில மாதங்களிலும் கிடைக்கும்.
இவை தவிர, 660 மெகாவாட் திறன்கொண்ட எண்ணூர் அனல் மின்திட்டம், 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின்திட்டம் என 1,980 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. எண்ணூர் மாற்று அனல்மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின்திட்டம் மூலம் மேலும் 2,260 மெகாவாட் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, வட சென்னை அனல் மின் திட்டம் 3-ம் நிலை, உடன்குடி அனல் திட்ட விரிவாக்கம், தூத்துக்குடி அனல் மின் திட்டத்துக்கான மாற்று திட்டம் என மொத்தம் 3,440 மெகாவாட் மின்திட்டங் களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக் கிறது.
மத்திய அரசால் நிறை வேற்றப்படவுள்ள 4 ஆயிரம் மெகாவாட் செய்யூர் அனல்மின் நிலையத்தில் நமது பங்காக 1,600 மெகாவாட் கிடைக்கும். மேலும், 3,330 மெகாவாட் மி்ன்சாரம் கொள்முதல் செய் வதற்கு நீண்ட கால ஒப் பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.
அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்ட கால கொள்முதல் ஆகிய வற்றின் மூலம் 4,640 மெகா வாட் மின்சாரம் பெறப்படுகிறது. எனவேதான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட் டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
இந்தியா
27 mins ago
ஆன்மிகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago