ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுதல்: சிலுவையில் அறையும் பிரார்த்தனை நடத்துகிறார் கராத்தே வீரர் ஹுசைனி

By செய்திப்பிரிவு

பிரபல கராத்தே மற்றும் வில் வித்தை வீரர் ஹூசைனி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடக்கிறது.

இதுபற்றி ஹூசைனி கூறியதாவது:

அதிமுக பொதுச்செய லாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன். முதலில் கால்களில் ஆணியை அடித்துக் கொண்டு, பின்னர் ஒரு கையில் ஆணியை அடிக்க திட்டமிட்டுள்ளேன். அப்படி இல்லை என்றால் ஒரு கையில் மட்டும் நான் அடித்துக் கொள்வேன். மற்றொரு கை மற்றும் கால்களில் என்னுடைய மாணவர்கள் ஆணியை அடிப்பார்கள். சிலுவையில் 6 நிமிடங்கள் 7 வினாடிகள் இருப்பேன். சிலுவையில் இருந்துக் கொண்டே இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சொற்பொழிவையும் நடத்த இருக்கிறேன்.

உலகிலேயே அதிக வலியை கொடுக்கக்கூடியது சிலுவை யில் அறைவதுதான். அதுவும் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் போது இன்னும் அதிகமான வலி ஏற்படும். அந்த வலியுடன் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கங் களை வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல் வாக வந்தால்தான் முடியும்.

உலகிலேயே முதல் முறையாக தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ள இருக்கிறேன். இதற்கு முன்பு 4 நாகப்பாம்புகளை கையில் விட்டு கடிக்க வைப்பது, நெருப்பில் இருந்து வெளியே வருவது என பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன்.

அதனால் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்வது பெரிய விஷம் இல்லை. இதற்கு காவல் துறை அனுமதி தேவை யில்லை. அதனால் நான் காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

க்ரைம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

18 mins ago

தொழில்நுட்பம்

29 secs ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்