பிப்.19, 20-ல் தமிழகம், புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிக்க முடிவு

By செய்திப்பிரிவு

தமிழக, புதுவை வழக்கறிஞர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண் டித்தும், மாவட்ட அளவிலான சிறந்த வழக்கறிஞர்களை நீதிபதியாக பரிந்துரை செய்திட வலியுறுத்தி பிப்.19 மற்றும் 20-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு, புதுவை வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.பரமசிவம் கூறியதாவது: வக்கீல்கள் தாக்கப் பட்டு வரும் சம்பவத்தை கடைபிடித்து வரும் காவல் துறையை கண்டித்து வரும் 19–ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம்.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் பதவி காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு மாவட்ட அளவில் பணியாற்றி வரும் சிறந்த திறமையும், நேர்மையும் உள்ள வழக்கறிஞர்களில் 6 பேரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து வரும் 20–ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இந்த நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் தமிழகம், புதுவை யைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்