தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீரங்கத்தில் இன்று ஆய்வு

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர்களுடன் முக்கிய ஆலோசனையும் நடத்துகிறார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 13-ம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. விதிமுறைகள் மீறல், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா என்பன உள்ளிட்ட புகார்களை எல்லா கட்சிகளும் பரஸ்பரம் கூறி வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவினர் சிலர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை பார்வையிடுகிறார். தேர்தல் பார்வையாளர்கள் ஸ்ரீதர் தோரா, பல்கார்சிங் மற்றும் வினோத்குமார், மாவட்டத் தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனிச்சாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் அலுவலர் மனோகரன் ஆகியோரு டன் முக்கிய ஆலோசனை நடத்த வுள்ளார். பின்னர், தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

திமுக சார்பில் அளிக்கப்பட்ட போலி வாக்காளர் பட்டியல் குறித்தும், பண பட்டுவாடா தொடர்பான புகார்கள் குறித்தும் சந்தீப் சக்சேனா ஆய்வு நடத்துவார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்