ராணிப்பேட்டையில் 10 பேரை பலிகொண்ட விபத்தில் அரசுக்கு ரூ.75 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கு பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு நேற்று உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந் திய அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், ராணிப்பேட்டை பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலைய (சி.இ.டி.பி.) கழிவுநீர்த் தொட்டி உடைந்த விபத்து தொடர்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 3-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந் திய அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உறுப்பினர்கள் “மாசு படுத்துவோர் (சிஇடிபி) அதை சரி செய் வதற்கான தொகையாக ரூ.75 லட்சத்தை, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை யிடம் ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும்.
அதில் ரூ.25 லட்சத்தை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு 2 மாதங்களுக்குள், தீர்ப்பாயத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ராணிப்பேட்டை சி.இ.டி.பி. 2 வாரங்களுக்குள் விபத்து தொடர் பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று இடைக்கால உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
29 mins ago
சினிமா
42 mins ago
விளையாட்டு
48 mins ago
வலைஞர் பக்கம்
1 min ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago