ஸ்ரீரங்கம் தொகுதியில் பிப். 8-ம் தேதி வீரேஸ்வரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அதிமுக, பாஜகவினர் இடையே மோதல் நடைபெற்றது. இது தொடர்பாக அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் கொடுத்த புகாரின்பேரில், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட பாஜக தலைவர் பார்த்தீபன், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜன் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் வேட்பாளர் சுப்பிரமணியன் உட்பட 3 பேரும் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கி, விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago