பெண்களிடம் தோஷம் கழிப்பதாக கூறி நகை பறித்த போலி சாமியார் கைது

By செய்திப்பிரிவு

சேலத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி பெண்களை குறிவைத்து நகையை பறித்த போலி சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாநகரில் சமீபகாலமாக திருமணமான பெண்களிடம் தோஷம் இருப்பதாகக் கூறி, கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின் மற்றும் மோதிரங்களில் ராசி கல் வைத்து அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும் என்று மர்ம நபர் தங்க நகைகளை ஏமாற்றி அபகரித்து சென்று வந்துள்ளார். இதுசம்பந்தமாக மாநகர பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் திருமணமான மருத்துவ கல்லூரி மாணவியிடம் தோஷம் இருப்பதாக கூறி அவரை போலி சாமியார் சென்னைக்கு அழைத்து சென்று, நகையை பறித்து கொண்டு தலை மறைவாகி விட்டார். பின், போலீஸார் அந்த மாணவியை மீட்டு சேலம் அழைத்து வந்தனர்.

அரசு மருத்துவ மனையில் கண் காணிப்பு காமிராவில் பதிவான உருவங்களை சோதனையிட்டு, அந்த நபரை அடையாளம் காட்டினார். போலீஸார் விசாரணை யில், மர்ம நபர் குடியாத்தம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார், சேலம் காந்தி மைதானம் பாலமுருகன் கோயில் அருகில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தான் தோஷம் இருப்பதாக கூறி பெண்களை மயக்கி நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (43) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.

கைதான சுரேஷ்குமார் திருமணமான புது பெண்களை குறிவைத்து மோசடி செய்து உள்ளார். தோஷம் இருப்பதாக கூறி பெண்களிடம் நகைகளை பறித்துள்ளார். போலி சாமியார் சுரேஷ்குமார் மீது வேலூர் வடக்கு, வேலூர் தெற்கு, காட்பாடி, குடியாத்தம், சத்தவாச்சேரி, திண்டிவனம் ஆகிய போலீஸ் நிலையங்களிலும், சேலத்தில் அரசு மருத்துவமனை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் 60 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. போலி சாமியார் சுரேஷ் குமார் கொடுத்த தகவலின் படி ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் தங்க நகைகள் மற்றும் அலைபேசி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்