ஐஆர்சிடிசி நிறுவனம் துபாய், தாய்லாந்து நாட்டுக்கு விமானம் மூலம் சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் பயணிகள் சுற்றுலாவை அறி முகப்படுத்தியுள்ளது. இதன்படி, துபாய் சுற்றுலா வரும் 23-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 26-ம் தேதி மீண்டும் சென்னையில் வந்து நிறைவடை கிறது. 4 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒரு வருக்கு ரூ.45,250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தாய்லாந்து நாட் டுக்கான சுற்றுலா பிப்.13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடையும். 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு ரூ.33,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் விமான பயணச்சீட்டு, 3 நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க குளிர்சாதன வாகனம், உணவு, பயணக் காப்பீடு, சுற்றுலா தகவலர் ஆகியவை அடங்கும்.
முன்பதிவு செய்ய
மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு முன்பதிவு செய்ய சென்னையில் 9840902917/9840902919, காட்பாடியில் 9840948484, மதுரை யில் 9003140714/9840902915, கோவையில் 9003140680 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங் களுக்கு www.irctctourism.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
29 mins ago
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
58 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago