தமிழகத்தின் ஸ்ரீரங்கம் உட்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்தார்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது. 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. ஜன. 19-ம் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய 27-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை மறுநாள் நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 30-ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் ஆந்திராவின் திருப்பதி, மகாராஷ்டிராவின் முக்கீத், கோவா வின் பனாஜி, அருணாசலப் பிரதேசத்தின் லிரோமொபோ, மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாகன்ச் சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago