தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் இந்த காலம் கட்சிக்கு வசந்த காலம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 34 இடங்களில், கட்சியின் வேட்பாளர் பெ.விஸ்வநாதனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார். இ.சி.ஆர்.சாலையில் கானாத்தூரில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது: மாமல்லபுரத்தில் தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு கொடுத்தவர் காங்கிரஸ் எம்பி விஸ்வநாதன். தமிழகத்தில் காங்கி ரஸ் பேரியக்கத்துக்கு வசந்த காலம் தொடங்கியுள்ளது. தேசிய கிராமப் புற வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் என எண்ணற்ற சட்டங் களைக் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் நிலையான ஆட்சியை காங்கிரஸால் மட்டுமே வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் வேட்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
35 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago