பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மோகன் என்ற வாசகர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
சென்னை பல்லாவரத்தில் இருந்து குன்றத்தூர் வரையிலான 7 கிலோ மீட்டர் நீள சாலை நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறுகிய சாலையாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரங்க ளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கிடையே, செம்பரம்பாக்கம் கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக இந்தச் சாலையின் பல இடங்களில் 6 அடிகள் வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப் பணிகளும் மெத்தனமாக நடந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் போக்குவரத்துக்கு முற்றிலும் தகுதியற்ற சாலையாக இது மாறியுள்ளது. இந்த சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பல்லாவரம் குன்றத்தூர் இடையேயான சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது. தற்போது, அங்கு கூட்டுகுடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருவதால், அதற்கான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. குடிநீர் திட்டப்பணிகள் முடிந்தவுடன் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago