மாரத்தான் போட்டிக்காக போக்குவரத்து 7-ம் தேதி மாற்றம்

By செய்திப்பிரிவு

மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு வரும் 7-ம் தேதி பழைய மகாபலிபுர சாலை மற்றும் பாரிமுனை, அடையார் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படு கிறது.

சென்னை மாரத்தான் ஓட்டம் வரும் 7-ம் தேதி காலை 4 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. தரமணி டைடல் பார்க்கில் இருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரை இப்போட்டி நடக்கிறது. மாரத்தான் ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் மத்திய தொழில்நுட்ப கல்லூரி (சிபிடி) சிக்னல் முதல் டைடல் பார்க் வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவானந்தா சாலையிலும் வாகனங்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்எஸ்ஸி போஸ் சாலையில்..

வடசென்னையில் இருந்து அடையார் நோக்கி வரும் வாகனங்கள், பாரிமுனையில் என்எஸ்ஸி போஸ் சாலையில் திருப்பிவிடப்படும். காந்தி மண்டபம் சர்தார் வல்லபாய் சாலையில் இருந்து பழைய மகாபலிபுர சாலைக்கு செல்லும் வாகனங்கள் அடையாறு சிக்னலில் வலது புறமாக திரும்பி செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

17 mins ago

ஜோதிடம்

30 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

51 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்