சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் உ. சகாயத்துக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது.

மதுரையில் நேற்று கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.எம். ஜோசப் தலைமையில் நடைபெற்ற மாநகர் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிரானைட் குவாரி கள் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் உ. சகாயம் தலைமையிலான விசா ரணைக் குழு தங்கியிருந்த விடுதி மற்றும் விசாரணை அறைகளில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. மேலும், அண்மையில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. எனவே, சகாயத்துக்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்என்எஸ். வெங்கட்ராமன், மாவட்டச் செயலர் பா. விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 secs ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்