குடிநீர் வாரியம் ரூ.227 கோடி வரி வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீர் வாரியத்துக்கு 2014-15-ம் நிதியாண்டில் டிசம்பர் 31-ம் தேதி வரை ரூ.451.69 கோடி கேட்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்.

அதில் நவம்பர் 30-ம் தேதி வரை ரூ.226.98 கோடி குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே தேதியில் வசூல் செய்யப்பட்டதை விட 21.38 கோடி அதிகமாகும். மீதமுள்ள நிலுவை தொகை 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வசூல் செய்யப்படும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நுகர்வோர் செலுத்தும் தொகைக்கு கணினி மூலம் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், நீண்ட கால நிலுவை தொகை மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்க்கவும் நுகர்வோர் வரி மற்றும் கட்டணத்தை உடனே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 secs ago

தமிழகம்

23 mins ago

சினிமா

43 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்