சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை குடிநீர் வாரியத்துக்கு 2014-15-ம் நிதியாண்டில் டிசம்பர் 31-ம் தேதி வரை ரூ.451.69 கோடி கேட்புத் தொகை செலுத்தப்பட வேண்டும்.
அதில் நவம்பர் 30-ம் தேதி வரை ரூ.226.98 கோடி குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே தேதியில் வசூல் செய்யப்பட்டதை விட 21.38 கோடி அதிகமாகும். மீதமுள்ள நிலுவை தொகை 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வசூல் செய்யப்படும்.
சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நுகர்வோர் செலுத்தும் தொகைக்கு கணினி மூலம் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், நீண்ட கால நிலுவை தொகை மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தவிர்க்கவும் நுகர்வோர் வரி மற்றும் கட்டணத்தை உடனே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 secs ago
தமிழகம்
23 mins ago
சினிமா
43 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
19 mins ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago