சென்னையில் ஜனவரி 4-ம் தேதி மதிமுக சார்பில் மதுவிலக்கு மராத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மாணவர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: மதுப்பழக்கத்தை ஒழிக்க மதிமுக சார்பில் ஜனவரி 4-ம் தேதி யன்று மாணவர்களுக்கான மதுவிலக்கு மராத்தான் போட்டி நடக் கிறது. மன்றோ சிலை அருகில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கும் போட்டி கலங்கரை விளக்கத்தில் நிறைவு பெறும்.
25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு தனியாகவும், 25 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தனியாகவும், 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையி லான பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாகவும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை யிலான மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாகவும் போட்டிகள் நடக்கிறது.
இதில் முதலிடத்தை பெறுவோ ருக்கு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், மூன்றாம் இடத்தை பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்க மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் உட்பட சென்னையின் 18 முக்கிய இடங்களில் பதிவு செய்து கொள் ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444011383, 9043015415, 9884255563 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
10 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago