திமுகவின் சென்னை மாவட்ட செயலாளர்கள் செவ்வாய்கிழமை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் உட்கட்சி தேர்தல்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதில் செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் சென்னை மாவட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
சென்னை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாவட்டச் செயலாளராக மாதவரம் சுதர்சனம், கிழக்கு மாவட்டச் செயலாளராக பி.கே.சேகர் பாபு, தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன், மேற்கு மாவட்டச் செயலாளராக ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியிடப்படும். சென்னையின் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட 44 பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்த 20 பகுதிகளுக்கு செவ்வாய்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இதன் இறுதியில் பகுதி செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago