திமுகவில் இருந்து விலகலா? - துரைமுருகன் மறுப்பு

By செய்திப்பிரிவு

திமுகவில் இருந்து விலகியதாக வெளியான செய்தியை அக்கட்சி யின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் மறுத்துள்ளார்.

கட்சியில் மு.க.ஸ்டாலின் ஆதர வாளர்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக் கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இத னால், சில பொறுப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. பெரும்பாலான மாவட்டங் களில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற் கிடையே, வேலூர் மாவட்ட செயலாளர் பதவி திமுகவின் மூத்த நிர்வாகியும், துணை பொதுச் செயலாளருமான துரைமுருகன் ஆதரவாளருக்கு வழங்குமாறு கேட்கப்பட்டதாகவும், இதற்கு மு.க. ஸ்டாலின் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக திமுக தலைமையிடத்தில் துரைமுருகன் வருத்தம் தெரிவித்து, மனம் விட்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, துரைமுருகன் திமுகவில் இருந்து விலகி விட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது.

இதுகுறித்து காட்பாடியில் இருக்கும் துரைமுருகனிடம் செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது அவருடைய பாணியிலேயே, ‘‘அது இந்த ஜென்மத்தில் நடக்காது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்