இன்டகிரேட்டட் அகாடமி ஃபார் பர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, பாகவத சேவா டிரஸ்ட் சார்பில் ‘நாம சங்கீர்த்தன விழா 2014’ சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது.
நேற்று மாலை நடந்த விழாவில், நாம சங்கீர்த்தனத்துக்கு தொண்டு செய்த பாகவதப் பெரியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஈரோட்டை சேர்ந்த பாகவதர் ராஜனுக்கு ‘சங்கீர்த்தன கலாநிதி’ என்ற விருது வழங்கப்பட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் கலந்து கொண்டு, அருளுரை வழங்கினார்.
இந்த விழாவில் பாகவத சேவா டிரஸ்ட் அறங்காவலர் கே.கல்யாணராம பாகவதர், கிருஷ்ண கான சபா செயலாளர் ஒய்.பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுச்சூழல்
12 mins ago
சுற்றுலா
24 mins ago
தமிழகம்
55 mins ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
3 hours ago