இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து விதமான ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அதிபர் ராஜபக்ச கையாண்டு வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபக்ச, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.
அதில் அவர், ‘இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கக்கூடாது என அரசு கூறியுள்ளது’ என சொல்கிறார். ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்திய பிரதமர் மோடியை புகழ்வதன் மூலமும், தமிழில் பேசுவதன் மூலமும் தமிழக மக்களை ராஜபக்ச ஏமாற்ற முயற்சிக்கிறார். ராஜபக்சவின் இந்த செயல் இலங்கையில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி செய்யப்படுவதாகும்.
இலங்கை அதிபர் ராஜபக்சவின் செயல் ஒரு பொய் பிரச்சாரம் என்பதை அரசும், பாஜகவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
43 mins ago
ஜோதிடம்
59 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago