தேர்தல் வெற்றிக்காக எமாற்று வழிமுறைகளை கையாள்கிறார் ராஜபக்ச: திருமாவளவன்

By செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து விதமான ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அதிபர் ராஜபக்ச கையாண்டு வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்ட அறிக்கை: இலங்கை அதிபர் ராஜபக்ச, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார்.

அதில் அவர், ‘இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கக்கூடாது என அரசு கூறியுள்ளது’ என சொல்கிறார். ஆனால் உண்மையில் ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்திய பிரதமர் மோடியை புகழ்வதன் மூலமும், தமிழில் பேசுவதன் மூலமும் தமிழக மக்களை ராஜபக்ச ஏமாற்ற முயற்சிக்கிறார். ராஜபக்சவின் இந்த செயல் இலங்கையில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிறுத்தி செய்யப்படுவதாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சவின் செயல் ஒரு பொய் பிரச்சாரம் என்பதை அரசும், பாஜகவினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்