எட்டயபுரம் அருகே நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்: 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

தூத்துக்குடி மாவட்ட எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த விவசாயி ராம் மோகன் (56). இவர் நேற்று கோவில்பட்டியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக அருப்புக்கோட்டை பாலையம்பட்டியில் இருந்து காரில் புறப்பட்டார்.

காரில் உறவினர்கள் வீராச்சாமி மனைவி ராஜம்மாள் (55), ராமசாமியின் மனைவி சரோஜா (57), செல்வநாயகி மகள் செல்வ லட்சுமி (59), கண்ணன் மகன் சுமன் (24) மற்றும் ராஜ்குமார் (17) ஆகியோர் வந்தனர். காரை சுமன் ஓட்டினார்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் சிந்தலக்கரைக்கு முன்பு உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னரின் பின்பகுதியில் மோதியது.

விபத்தில், ராஜம்மாள், ராஜாராம், சரோஜா ஆகிய 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

சுமன், செல்வலட்சுமி, ராஜ்குமார் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் சுமன், ராஜ்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி ஓட்டுனர் ஓட்டப்பிடாரம் வட்டம் கீழக்கோட்டையைச் சேர்ந்த மொட்டையன் மகன் முருகன் (36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்