திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்

By செய்திப்பிரிவு

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வெள்ளக்கோவில் சாமிநாதனை விடுவித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1980-களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது திமுகவும் இளைஞரணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளர் ஆனார் ஸ்டாலின்.

அப்போது திமுகவில் வாரிசு அரசியல் என கண்டனம் எழுந்தது. ஆனால், அது பின்னர் மற்ற கட்சிகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டதால் வாரிசு என்கிற கோஷம் எடுபடவில்லை. இந்நிலையில் ஸ்டாலினைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் வந்தனர்.

இளைஞரணிச் செயலாளராக 37 ஆண்டுகள் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார். சமீபத்தில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் ஸ்டாலின். அதற்கு முன்னரே அவர் வகித்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு எழுந்தது. அவர் சினிமாவில் நடித்து வந்தார். இது தவிர முரசொலி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். சினிமா மூலம் பிரபலமான அவருக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும் என்பது பலரது நீண்ட கால கோரிக்கை. அதை ஸ்டாலின் தள்ளிப்போட்டு வந்தார்.

ஆனால் வீட்டுக்குள்ளும், கட்சிக்குள்ளும் கோரிக்கை வலுத்து வந்தது. நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை ஏற்ற தந்தைக்கு உதவியாகப் பிரச்சாரத்தில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்.

பல இடங்களில் அவரது பேச்சு பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்தது.  கேள்வி- பதில் பாணியில் அவரது பேச்சு வரவேற்பைப் பெற்றது. தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பெருவெற்றி பெற உதயநிதியும் காரணமாக இருந்தார் என்று திமுக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் உதயநிதியைக் கொண்டாடினர்.

இது அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்தது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினைப் பொறுப்பில் கொண்டு வரவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

மக்களவைத் தேர்தல் முடிந்த கையோடு, மாவட்டம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகள் தலைமைக்குக் கடிதம் அனுப்பி வைத்தனர்.

கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் திமுகவும் புதிய வடிவம் எடுக்கவும் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சியை வலுவாகக் கொண்டு செல்லவும் முடிவெடுத்தாக வேண்டும் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.

மேற்கண்ட கருத்துகளைப் பரிசீலித்த திமுக தலைமை உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக்க முடிவு செய்தது. இதையடுத்து திமுக தலைமை உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணிச் செயலாளராக நியமித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பு வகித்துவரும் வெள்ளக்கோவில் சாமிநாதனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக கட்சியின் சட்டதிட்ட விதி 18, 19-ன்படி உதயநிதி ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே நியமிக்கப்பட்டவர்கள் அவருக்கு இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்