மழை வேண்டி, சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி நடந்து வருகிறது. பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள இந்தக் கச்சேரி, 12 மணிநேரம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தியாகராய நகரில் சர்வதேச கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல இசைக் கலைஞர்களான நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், பாம்பே சகோதரிகள், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மழை வேண்டி நடத்தப்படும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில், அமிர்த வர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட ராகங்கள் பாடப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குத் தொடங்கிய இசை நிகழ்ச்சி, இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மேக ராக வர்ஷினி உள்ளிட்ட ராகங்களும் இசைக்கப்பட்டு, பாடப்பட்டன.
இந்த இசை நிகழ்ச்சியில் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
41 mins ago
சினிமா
54 mins ago
விளையாட்டு
1 hour ago
வலைஞர் பக்கம்
13 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago