மழை வேண்டி சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி

By செய்திப்பிரிவு

மழை வேண்டி, சென்னையில் கர்நாடக இசைக் கச்சேரி நடந்து வருகிறது. பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ள இந்தக் கச்சேரி, 12 மணிநேரம் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தியாகராய நகரில் சர்வதேச கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரபல இசைக் கலைஞர்களான நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், பாம்பே சகோதரிகள், அருணா சாய்ராம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மழை வேண்டி நடத்தப்படும் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சியில், அமிர்த வர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி உள்ளிட்ட ராகங்கள் பாடப்பட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குத் தொடங்கிய இசை நிகழ்ச்சி, இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.

வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சிருங்கேரி சாரதா பீடத்தில்  நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மேக ராக வர்ஷினி உள்ளிட்ட ராகங்களும் இசைக்கப்பட்டு, பாடப்பட்டன.

இந்த இசை நிகழ்ச்சியில் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

54 mins ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

13 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

49 mins ago

மேலும்