சென்னையில் வெவ்வேறு இடங் களில் நடந்த சாலை விபத்துகளில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.
மதுரவாயலைச் சேர்ந்தவர் டேவிட் (19). தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்துவந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி யளவில் வேலையை முடித்துவிட்டு வீடு நோக்கிச் சென்று கொண்டி ருந்தார். மதுரவாயல் - பூந்த மல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழி யாகச் சென்ற லாரி மோதியது. இதில், டேவிட் சம்பவ இடத் திலேயே உயிர் இழந்தார். இச்சம் பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் பூபதி என்பவரைக் கைது செய்தனர்.
சேலையூரை அடுத்த ராஜகீழ்ப் பாக்கத்தைச் சேர்ந்தவர் சரத் குமார் (20). தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்துவந்தார். நண்பர் சிவக்குமாருடன் நீலாங் கரையை அடுத்த அக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு செல்லும்போது, அவர் ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்றி ருந்த மரத்தின்மீது மோதியது. இதில், சரத்குமார் உயிர் இழந் தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
மேடவாக்கம் அடுத்த கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்தவர் பலராமன் (52). இவர் கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். வேகத் தடையில் ஏறி இறங்கியபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில், பலராமன் உயிர் இழந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago