ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.கல்பனா நாயக் சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளராகவும், மகேந்திர குமார் சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், மகேஷ் மதுரை நகர தலைமையிடத்து துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் நகர துணை ஆணையராக இருந்த ஆர்.ராமகிருஷ்ணன் தூத்துக்குடி போலீஸ் பயிற்சிப் பள்ளி முதல்வராகவும், கோவை நகர துணை ஆணையராக எம்.துரை கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்ட எஸ்பியாக இருந்த ஜி.தர்மராஜன் கோவை நகர தலைமை இடத்து துணை ஆணையராகவும், மதுரை நகர துணை ஆணையராக இருந்த மயில்வாகனன் திருச்சி நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு
ஏஎஸ்பியாக இருந்த அருண் பாலகோபாலன், ஸ்டீபன் ஜேசுபாதம், தங்கதுரை ஆகியோருக்கு எஸ்பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, முறையே மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையர், சென்னை சிபிசிஐடி எஸ்பி, சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் என நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி நேற்று வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
6 mins ago
இந்தியா
10 mins ago
சுற்றுலா
34 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago