சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.22 ஆயிரத்து 208க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று திடீரென உயர்ந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.22 ஆயிரத்து 208-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 776-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 748க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, “தங்கம் ஏற்றுமதியில் மத்திய அரசு சில புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, 8 காரட் முதல் 22 காரட் வரையிலான தங் கத்தை ஏற்றுமதி செய்துக் கொள்ள லாம். ஆனால், 24 காரட் தங்கத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago