நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மருத்துவப் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதால் புதிய தர வரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சத வீதமும் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago