ஆஸ்திரேலியா நாட்டு பழங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை அதிகரிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய அமைச்சர் தலைமையிலான குழு, கோயம்பேடு பழச்சந்தையை நேற்று பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அமைச்சர் தலைமையிலான குழுவை கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலக முதன்மை நிர்வாக அலுவலர் பி.பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சி.ஆர்.ராஜன்பாபு ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அந்த குழு, கோயம்பேடு பழ சந்தையில் உள்ள கடைகளையும், அங்கு விற்கப்படும் பழங்களையும் பார்வையிட்டனர். பின்னர், பழ வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன் மற்றும் துரைசாமி உள்ளிட்டோரிடம், சந்தை நிலவரம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் ஆஸ்திரேலிய அமைச்சர் லூக் ஆர்ட்சூய்கெர் நிருபர்களிடம் கூறும்போது, “ஆஸ்திரேலிய லிச்சி, ஸ்ட்ராபெரி, இனிப்பு அன்னாச்சிபழம் உள்ளிட்ட பழங்களுக்கு உலக அளவில் நல்ல சந்தை வாய்ப்பு கள் உள்ளன. அந்நாட்டின் ஒட்டுமொத்த பழ உற்பத்தியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி சந்தை மதிப்பு 10 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஆஸ்திரேலிய நாட்டு பழங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ள நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்திய நாட்டுக்கான பழ ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கோயம் பேடு பழ சந்தையை பார்வையிட்டு, பழ வியாபாரிகளுடன் கலந்துரையாடினோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
21 mins ago
சினிமா
34 mins ago
விளையாட்டு
40 mins ago
சினிமா
46 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
52 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago